(எஸ.;நவா)
இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணியின் அங்குராப்பண நிகழ்வு முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் களுவாஞ்சிகுடி அமரர் இராசமாணிக்கம் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(2) நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.செல்வராசா இ பிரதேச சபை உறுப்பினர்கள்இ கல்விமான்கள் இ பிரதேச இணைப்பாளர்கள்இ பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கட்சியின் கொள்கைப் பிரகடனம் மற்றும் கட்சியின் விதிமுறைகள் தொடர்பான விடயங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சாமஸ்ரீ தேச கீர்த்தி க.சிறிஸ்குமாரினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.. இறுதியாக நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.