மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் யாழ்.மாவட்டச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு அவர் சம்பிரதாய பூர்வமாக தனது கடைமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அரசியல் அழுத்தங்களால் இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட யாழ்.மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் பதவி விலகியிருந்த நிலையில் மகேசன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.
வேதநாயகன் பதவி விலகுவதற்கு முன்னதாக கணபதிப்பிள்ளை மகேசனின் நியமனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
மகேசன் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராகவும் கென்யா நாட்டின் இலங்கைத் தூதரகத்தின் பதில் தூதுவராகவும் பணியாற்றியிருந்த போதிலும் மாவட்டச் செயலராக (அரச அதிபர்) பதவி வகிப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு அவர் சம்பிரதாய பூர்வமாக தனது கடைமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அரசியல் அழுத்தங்களால் இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட யாழ்.மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் பதவி விலகியிருந்த நிலையில் மகேசன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.
வேதநாயகன் பதவி விலகுவதற்கு முன்னதாக கணபதிப்பிள்ளை மகேசனின் நியமனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
மகேசன் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராகவும் கென்யா நாட்டின் இலங்கைத் தூதரகத்தின் பதில் தூதுவராகவும் பணியாற்றியிருந்த போதிலும் மாவட்டச் செயலராக (அரச அதிபர்) பதவி வகிப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.