ஜெயந்திபுரத்தில் உள்ள வறிய மக்களுக்கு கைகொடுத்த சுவிஸ் உதயம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

குpழக்கு மாகாணத்தில் கல்வி மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தலை நோக்காக கொண்டுசெயற்பட்டுவரும் சுவிஸ் உதயம் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பிரதி பொருளாளர் பேரின்பராஜாவின் துணைவியார் வாணுவின் பிறந்த நாளையொட்டி இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

முட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதி செயலாளருமான திருமதி செல்வி மனோகரின் ஒருங்கிணைப்பில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் த.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பிரதி செயலாளர் சங்கரப்பிள்ளை சுபாஷ்கோ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

முட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியம் சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது மிகவும் வறிய நிலையில் உள்ள 50 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.