ஜனாதிபதி,பிரதமரால் மட்டக்களப்பினை சேர்ந்தவர்களுக்கும் காணிகள் வழங்கிவைப்பு


ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கௌரவ காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் தலைமையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளில் குடியிருக்கின்ற "2500"" பயனாளிகளுக்கு உறுதி வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் செயலகத்தில் (அலரி மாளிகையில்) 24.02.2020 ஆம் திகதி நடைபெற்றது.

இந் நிகழ்வில் இலங்கையின் பல மாவட்ட காணி சீர்திருத்த அதிகார சபையினை பிரதிநிதித்துவப்படுத்தி உறுதிகள் வழங்கப்பட்டதோடு,  மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பணிப்பாளர் நே.விமலராஜ் மற்றும் மாவட்ட உத்தியோகஸ்தர்களின் முயற்சியில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மக்களுக்கும் உறுதிகள் வழங்கப்பட்டது.