2009 ஆம் ஆண்டு சிவானந்த தேசிய பாடசாலையில் கடமையாற்றும் போதே அதிபர் தரத்திற்கு உயர்ந்த திருமதி உதயகுமார் 2010 இல் கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியிலும், 2012 இல் அரசடி மகாஜனக் கல்லூரியிலும் அதிபராக சேவையாற்றி 2013 இல் ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் அதிபராக பொறுப்பு வகித்து தற்போது வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த கல்விப் பின்னணி கொண்ட குடும்பத்தினை சேர்ந்த இவர் நல்லதொரு கல்வி நிர்வாகியாக சேவையினை வழங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சு.குலேந்திரகுமார், அதிபர் உதயகுமார், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இப் பாடசாலையின் அதிபராக பதவி வகித்த திருமதி சி.சுபாகரன் அவர்கள் தற்போது வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.