மண்முனைப்பற்றில் பிரியங்கன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு

மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக மதிசுதன் பிரியங்கன் தெரிவுசெய்யப்பட்டார்.

இன்று காலை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இதனடிப்படையில் மதிசுதன் பிரியங்கன் 150 வாக்குகளைப்பெற்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.