மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் ஆலய உண்டியல் ஒன்றினை உடைத்து திருட முற்பட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களினால் மடக்கிபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று பகல் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் திருட முற்பட்ட 16வயது இளைஞனே இவ்வாறு பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
குறித்த இளைஞன் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் எனவும் குறித்த இளைஞன் ஆலய உண்டிலை உடைத்துக்கொண்டிருக்கும்போது அப்பகுதி இளைஞர்களினால் பிடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞன் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று பகல் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் திருட முற்பட்ட 16வயது இளைஞனே இவ்வாறு பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
குறித்த இளைஞன் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் எனவும் குறித்த இளைஞன் ஆலய உண்டிலை உடைத்துக்கொண்டிருக்கும்போது அப்பகுதி இளைஞர்களினால் பிடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞன் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.