இலங்கை இளைஞர்களுக்கு வரப்பிரசாதமான இலங்கை பாராளுமன்றத்திற்க்கு நிகரான இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெல்லவும் அதனூடாக பாராளுமன்ற அரசியலுக்கு நுழையவும் வாய்ப்பினை வென்றிடப்போகிறார்கள் இலங்கை இளைஞர்கள்.
இலங்கை இளைஞர் பாராளுமன்றம் , இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இந்த நாட்டு இளைஞர் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்க்காக செயலாற்றி வரும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.
யார் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும்?
அதற்கான தகமை என்ன?
2010ம் வருடத்தில் இலங்கையில் முதலாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற்றது.
இதுவரை நான்கு இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றிருக்கிறது இவற்றில் முதல் இரண்டு தேர்தல்களும் பிரதேச ரீதியாகவும் , கடைசி இரு தேர்தல்கள் தொகுதிவாரியாகவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் பெப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது, 15 தொடக்கம் 29
அல்லது 15 தொடக்கும் 29
வயதிற்குட்பட்ட 2020ம் வருடத்திற்க்காக பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களில் நிறைவேற்றுத்தர பதவிகளில் உள்ள இளைஞர் யுவதிகள் (தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர், அமைப்பாளர்) மாத்திரமே போட்டியிட முடியும்.
கடந்த காலங்களில் இளைஞர்பாராளுமன்ற தேர்தல்கள் பிரதேசத்திற்க்கு பொறுப்பான இளைஞர்சேவை அதிகாரிகளின் முற்றுமுழுதான ஒருங்கிணைப்பில் நடைபெற்று வந்த நிலையில் இம்முறை தேர்தலுக்காக தேர்தல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்பை பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் விசேட வழிகாட்டல் ஆலோசனையுடன் இம்முறை இளைஞர்பாராளுமன்ற தேர்தல் புதிய நடைமுறையுடன் நடைபெறலாம் எனவும் நம்பலாம்., இதற்க்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் மட்ட குழுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரியவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர் கழக புனரமைப்பு பணிகள் கிராமம் தோறும் சமகாலத்தில் நடந்து கொண்டிருப்பதனால் உரிய காலத்திற்குள் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளை தொடர்புகொண்டு இளைஞர்கழகமொன்றை புதிதாக நிர்மாணித்துக்கொள்வதற்க்கும், பழைய இளைஞர் கழகமாயின் கட்டாயம் புனரமைப்பு செய்யவும் வேண்டும்.
இளைஞர்கழகத்தின் நிறைவேற்றுத்தர பதவியொன்றை வகிக்கும் நபர் ஒருவரே தேர்தலில் போட்டியிட முடியும் என்பதோடு, இளைஞர்கழகத்தில் அங்கத்துவம் பெறும் இளைஞர், யுவதிகளே வாக்களிக்கவும் தகுதி பெறுகின்றனர்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர் ஒருவர் சரியான திட்டமிடலுடன் இளைஞர் கழகங்களுக்கு கிராம பிரதேச ரீதியாக அதிகமாக அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதுடன் அவர்களின் அங்கத்துவத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கணேசமூர்த்தி சசீந்திரன்
இளைஞர் சேவை அலுவலர்
பிரதேச செயலகம்
மண்முனை மேற்கு