பட்டிருப்பு கல்வி வலயத்தின் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஞானராஜா காலமானார்

பட்டிருப்பு கல்வி வலயத்தின் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் செ.ஞானராஜா இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டைக்கல்லாறை பிறப்பிடமாகவும் பெரியகல்லாறை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானராஜா கல்விதுறை வரலாற்றில் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய நிலையில் கல்வி நிர்வாக சேவையில் சித்திபெற்று பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
கல்வித்துறையில் சிறப்பான பணியாற்றியுள்ள அவர் கணிதத்துறையில் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பெரும்பானியாற்றியுள்ளார்.
அன்னாரின் பூதவுடல் பெரியகல்லாறு வங்களா வீதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை பெரியகல்லாறில் உள்ள உறவுகள் உறங்கும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.