மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கஜமுகாசூர சம்ஹார நிகழ்வு

இந்துக்களின் மிக முக்கியத்துவம்வாய்ந்த விரதங்களில் ஒன்றாக விநாயகசஸ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று மாலை கஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் கஜமுகா சம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலை கஜமுகா சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 21 தினங்களாக ஆலயத்தில் விநாயகசஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்பட்டுவந்த நிலையில் இறுதிநாளான நேற்று கஜமுகா சூர சம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் விசேட மகா கணபதி ஹோமம் நடாத்தப்பட்டு மாலை மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக ஆலய முன்றிலுக்கு விநாயகப்பெருமான் எழுந்தருளிய நிலையில் அங்கு ஜமுகா சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த சூரசம்ஹார நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.