புளியந்தீவில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு.





சுனாமி கோர தாண்டவத்தின் 15வது ஆண்டு நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிகழ்வுகள் இடம் பெற்றன.

அவ்வகையில் மட்டக்களப்பு புளியந்தீவு பிரதேசத்திலும் இந்நினைவேந்தல் நிகழ்வானது புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மிக உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

ரிதம் இளைஞர் கழகத்தின் தலைவர் சில்வயன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பிரதி  உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன், புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் உபதலைவர் திருச்செல்வம், செயலாளர் கிசாந்தன், மலரும் மொட்டுகள் சிறுவர் கழக ஆலோசகர் திருமதி வாசுகி மற்றும் ரிதம் கழக நிருவாகத்தினர், உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது உயிர்நீத்த உறவுகளுக்காக மௌன வணக்கம் செலுத்தப்பட்டதுடன், சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.