அம்பாறை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வது உறுதி.




அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் அவ்வாறு  ஒற்றுமையாக வாக்களிப்பு நிறைவேறினால்  வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி
வாலிபர் முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் கருத்து .

நேற்றைய தினம் 12.12 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அ.நிதான்சன்
 வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளமையால் அதன் சாத்தியப்பாடுகள் இன்னும் அதிகரித்து உள்ளது.

இருந்தபோதும் இன்றைய பிரதேச பிரிவினைகளையும் ஆளுக்கொரு கட்சிகள் உருவாக்கமும்  இன்று தமிழ் மக்களிடையே பிரிவினைகளை தோற்றுவித்து நிற்பது வேதனை தருவதாகவே உள்ளது.


இந்த நிலமைகள்  தவிர்த்து  நாம் ஒற்றுமைபட வேண்டிய கட்டாயத்தில்  இருக்கின்றோம் , ஒற்றுமைப்படுவதன் மூலம்  இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகளை பெறக் கூடிய வாய்ப்புகள் நிச்சயமாக உண்டு .

 இருந்தும் அதிக கட்சிகளின் உருவாக்கத்தால் சிறுபான்மையாக அம்பாறையில் இருக்கும் தமிழர்கள் எவ்வித பிரதிநிதிகளையும் பெற முடியாத நிர்கதிக்கு உள்ளாக நேரிடும்.


எம்மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும்.அதற்குரியவகையில் எம் மக்களுக்கான தெரிவு அவர்கள் விரும்பும் வேட்பாளர்களாக இருக்க வேண்டும்.

இதனை இம்முறை இலங்கை தமிழரசு கட்சி முன்னுதாரணமாக கொண்டு செயல்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  திரு.இரா.சம்மந்தன் அவர்களால் கூறப்பட்ட படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விடயம் மனமகிழ்ச்சியான செய்தியாகவுள்ளது.

  இது புதிய விடயமல்ல ஏனெனில் இலங்கை தமிழரசு கட்சியே இன்று இளைஞர்களுக்கான அரசியல் அடையாளத்தை உருவாக்கியுள்ளது .

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி திறம்பட செயலாற்றுக்கின்றது அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் கட்டாயமாக வாலிபர் முன்னணியில்  இணைந்து அம்பாறை மாவட்ட இளைஞர்களின் அரசியல் அடையாளத்தை உருவாக்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகின்றோன்.


மேலும் எந்த  அரசு ஆட்சிக்கு  வந்தாலும் கல்முனை மக்களின் கோரிக்கையான வடக்கு பிரதேச செயலக கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்காக கடந்தகாலத்தில் கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றம் கண்டபோதிலும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்கின்ற மன ஆதங்கமும் அதிருப்தியும் மக்களிடையே காணப்படுவது நியாயமானதே.

இருந்தும் இதனை காட்டி ஒருசில அரசியல் கட்சிகள் இலாபம் தேடிவருகின்றனர். இவ்வாறான தருணத்தில் அம்பாறை மாவட்டத்தில் எமக்கான பாராளுமன்றத்தின் குரல் இரண்டாக ஒலிக்க வேண்டும் அது எம் மக்களின் கைகளில் தங்கியுள்ளது, அதற்க்காக  அனைவரும் ஒற்றுமையாக பிரிவினை இல்லாது வாக்களிப்பு செய்ய வேண்டும்.