களுதாவளையில் விபத்து -இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பகல் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் களுதாவளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை பின்னால்வந்த இன்னுமொரு மோட்டர் சைக்கிள் வேகமாக வந்து மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மனைவி படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.