செங்கலடி-பதுளை வீதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் போக்குவரத்து

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்துகளும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் நீர்நிலைகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

ஆத்துடன் சில பகுதிகளில் வீதிகளின் மேலாக நீரோட்டம் காரணமாக போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

செங்கலடி - பதுளை பிரதான வீதியில் கித்துள் பகுதி வீதியின் மேலாக வெள்ளநீர் செல்வதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.