கோத்தா வெற்றி – பட்டாசு வெடித்து மகிழ்ச்சிகொண்டாடிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

இலங்கை சோசலிச குடியரசின் 07வது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஸ வெற்றிபெற்றதாக பொதுஜன பெரமுனவினால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக இன்று காலை பட்டாசுகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட மாநகரசபை,பிரதேசசபை உறுப்பினர்கள்,இளைஞர் அணியினர் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த வெற்றியை ஆதரவாளர்கள் அமைதியான முறையில் கொண்டாடவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.