பெரிய கல்லாற்றில் கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தால் உடம்பு வலு ஊட்டும் நிலையம் திறந்து வைக்கபட்டது


(புருசோத்)

பெரிய கல்லாற்றில் கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உடம்பு வலு ஊட்டல் நிலையம் திறந்து வைக்கபட்டது 


இந்த நிகழ்வானது கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமயில் இடம்பெற்றது இதன் போது பிரதம விருந்தினர்களாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் திரு.இராசமாணிக்கம் சானக்கியன் மற்றும் சர்வார்த்த ஸ்ரீ சித்திவினாயகர் ஆலய செயளாளர் திரு.நே.கமல்ராஜ் அவர்களும் மற்றும் கல்லாறு மத்தி விளையாட்டு கழகத்தின் போசகர் திரு.க.கனகுசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்  இதன் போது கிராம இளைஞர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்

இதன் போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் உதை பந்து அணியை மென்மேலும் மேன்படுத்த இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இராசமாணிக்கம் சானக்கியன் அவர்கள் 75000/= ரூபா பெறுமதியான உதைபந்தாட்ட பாதணிகளை கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் உபதலைவரும் பொரியிளாளருமான திரு.த.விவேக்ச்சந்திரன் மற்றும் செயளாளர் திரு.இ.தினேஸ்குமார் அவர்களிடமும் இதன் போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரசமாணிக்கம் சானக்கியன் அவர்கள் வழங்கி வைத்தார்.