மட்டக்களப்பில் தொடரும் மழையுடனான காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேன் கிழக்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக கடும் மழைபெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவருகின்றது.

இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் மட்டக்களப்பு உட்பட வடகிழக்கின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.