சுவிஸ் அமைப்பினால் தொடர்ந்து உதவிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களின் நலன் கருதி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை சுவிஸ் உதயம் அமைப்பு மேற்கொண்வருகின்றது.

இன்று சுவிஸ் அமைப்பின் 15வது வருட பூர்த்திவிழா இன்று சுவிஸில் நடைபெற்றுவரும் நிலையில் அதற்கு இணையாக மக்களுக்கான சேவைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடையில் வறுமை நிலையில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகங்களை வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் மற்றும் பொருளாளரின் புதல்வர்களின் உதவியுடன் இந்த குடிநீர் விநியோகம் அமைக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.