மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் பல்வேறு வேலைத்திட்டங்களை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் வறிய நிலையில் உள்ள நூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் நான்கு குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன்போது புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்னொருவரின் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்;டுக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன்,சுவிஸ் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் எஸ்.விமலநாதன், பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,உபசெயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்னொருவரின் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்;டுக்கான உதவி ஆகியனவற்றினை சுவிஸ் உதயம் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் வழங்கியிருந்ததுடன் நான்கு குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டத்திற்கான உதவிகளை சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் துரைநாயகத்தின் பிள்ளைகளான விஜி,சுஜி ஆகியோரும் வழங்கியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு கிராமத்தில் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்த நான்கு வறிய குடும்பங்களுக்கு இதன்போது குடிநீர்விநியோகங்கள் திட்டங்களும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
தாங்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்ததாகவும் தமக்கு இந்த குடிநீர் உதவிகளை பெற்றுத்தந்த சுவிஸ் உதயம் அமைப்புக்கு இதன்போது நன்றி தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் வறிய நிலையில் உள்ள நூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் நான்கு குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன்போது புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்னொருவரின் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்;டுக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன்,சுவிஸ் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் எஸ்.விமலநாதன், பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,உபசெயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்னொருவரின் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்;டுக்கான உதவி ஆகியனவற்றினை சுவிஸ் உதயம் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் வழங்கியிருந்ததுடன் நான்கு குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டத்திற்கான உதவிகளை சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் துரைநாயகத்தின் பிள்ளைகளான விஜி,சுஜி ஆகியோரும் வழங்கியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு கிராமத்தில் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்த நான்கு வறிய குடும்பங்களுக்கு இதன்போது குடிநீர்விநியோகங்கள் திட்டங்களும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
தாங்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்ததாகவும் தமக்கு இந்த குடிநீர் உதவிகளை பெற்றுத்தந்த சுவிஸ் உதயம் அமைப்புக்கு இதன்போது நன்றி தெரிவித்தனர்.