விவேகானந்தா பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அரச அதிபர்.





மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு      விவேகனந்தா தொழில்நுட்பகல்லூரியில் தொழிற் பயிற்சி நெறிகளை  பூர்த்தி செய்த மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2019/09/03 இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு ஆத்மீக அதிதியாக
ஸ்ரீமத் சுவாமி தக்ஷானந்தஜு மகராஜ் அவர்களும் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் திரு.எம்.உதயகுமார் அவர்களும் விசேட அதிதியாக மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன்  அவர்களும்   சிறப்பு அதிதியாக  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஹாலிதீன் ஹமிர் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

இக்கல்லூரியானது இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தொழில்த் தகைமையுடைய  மாணவர்களை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.