கிழக்கில் வாழுகின்ற இந்துக்கள் சார்பாகவும் இந்து மத அமைப்புக்கள் சார்பாகவும் எமது இந்து மத குருமார் ஒன்றியம் சார்பாகவும் எமது நாட்டின் இந்துமத பொக்கிசங்கள் நிறைந்த இடமாக போற்றப்படுகின்ற முல்லைத்தீவு நீரவீயடிப்பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மையை சீர் கெடுத்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்து குருமார் ஒன்றியம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இறந்த தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை அதனைத்தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்
திருகோணமலை கண்ணியாவிலும் முல்லைதீவிலும் நடைபெற்ற தகாத சம்பவங்கள் எமது இந்து சமயத்தை தொடர்ச்சியாக அவமதித்த வருகின்ற செயற்பாடுகளாகவே இருந்து வருகின்றது .
நாட்டின் நல்லாட்சி என்ற பெயரில் எமது மக்கள் , எமது மதம் , எமது கலை , கலாச்சாரம் என்பவற்றில் பாரிய கலங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது .
இது தெய்வ நிந்தனையும் கூட , எனவே தயவு செய்து எமது இந்துமத அலுவல்கள் அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு தீர்வை பெற்றுத்தர வேண்டுமென்ற கோரிக்கையுடன் , இச்சம்பவத்தை கிழக்குமாகாண இந்து குருமார் ஒன்றியம் சார்பாக வண்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ள இந்து குருமார் ஒன்றியம் நாளை கண்டன போரணியொன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன.