மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு!


மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று நடைபெற்ற மக்களுக்கான துரித சேவைகளை வழங்கும் நோக்கில்  நவீன தொழிநுட்ப  முறையிலான  சேவைகள்  மையம்  திறந்து வைக்கும் நிகழ்வில் மாநகர சபையுடன் இணைந்து மாநகர செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு வழங்கி வரும் ஊடகவியலாளர்கள் சிலர் கௌரவிக்கப்பட்ட னர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உண்மை நிலவரங்களை துணிச்சலுடன் உடனுக்குடன் வெளிக்கொண்டுவரும் தமிழ் ஊடகவியலாளர்களை மாநகர ஆணையாளர் வே. சித்திரவேல் மாநகர முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் , க. சத்தியசீலன் ஆகியோர் இணைந்து கௌரவிப்பு செய்ததுடன் ஊடகவியலாளர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் வ. கிருஸ்ணகுமார், செயலாளர் செ. நிலாந்தன், ஊடகவியலாளர் களான பு. சசிகரன், கு.சுபஜன், அ.லியோன்ராஜ், யோ.சசி, சி. பாக்கியநாதன், த. தவபாலன், ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.