தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் வேலைத்திட்டங்களுக்கு என்ன நடந்தது? - பா.உ சீ.யோகேஸ்வரன்.




மட்டக்களப்பு நகர் பகுதிகளில் தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் வேலைத்திட்டங்களை நேரடியாக பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர்  சீ.யோகேஸ்வரன்.

இன்று (15.09) மட்டக்களப்பு ஜெயந்திபுரம் சிறி குமாரத்தன் ஆலயத்திற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் கம்பிரலிய திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இடம் பெறும் வேலைத்திட்டம், மற்றும் வீதி புனரமைப்பு வேலைகளை  பார்வையிட்டதுடன் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் ஆலோசனைகளை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரனும் குறித்த வேலைத்திட்டங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.