விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் மரணம் -சோகத்தில் பெரியகல்லாறு

மட்டக்களப்பு மகிழுர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவர் இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்கம்பத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியகல்லாறு,காளிகோவில் வீதியை சேர்ந்த ஜெ.கேதுசன்(13வயது)என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் மரணம் காரணமாக பெரியகல்லாறு கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.