புன்னைச்சோலை 2ஆம் குறுக்கு வீதியானது புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட புன்னைச்சோலை 2ஆம் குறுக்கு வீதியானது மாநகர சபையின் துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. 

கிழக்கு மாகாண சபையின், விஷேட அபிவிருத்தி நண்கொடை நிதியின் ஊடாக குறித்தொதுக்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 540 மீற்றர்கள் நீளமான வீதியானது புனரமைப்பு செய்யப்பட்டவுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் பு.ரூபராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.