மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் எச்சங்களை அகற்றுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தண்ணீர் புகைத்தாக்குதல் வண்டிகளும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சீயோன் தேவாலய தற்கொலைதாரியான முகம்மது அஸாத்தின் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மட்டக்களப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில் குறித்த உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் இருந்து அகற்றுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
உடற்பாகங்களை அகற்றும் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இங்கு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தண்ணீர் புகைத்தாக்குதல் வண்டிகளும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சீயோன் தேவாலய தற்கொலைதாரியான முகம்மது அஸாத்தின் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மட்டக்களப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில் குறித்த உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் இருந்து அகற்றுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
உடற்பாகங்களை அகற்றும் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இங்கு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.