இராம பிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஆறாம் நாள் உற்சவம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய ஒருங்கே கொண்ட வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜ குருக்கள் தலைமையில் வருடாந்த மஹோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகின்றது.
மோசப்பிட்டி மக்களின் ஏற்பாட்டில் இன்றைய ஆறாம் நாள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இன்று வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா என்பன சிறப்பாக நடைபெற்றன.
இன்றைய உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய ஒருங்கே கொண்ட வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜ குருக்கள் தலைமையில் வருடாந்த மஹோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகின்றது.
மோசப்பிட்டி மக்களின் ஏற்பாட்டில் இன்றைய ஆறாம் நாள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இன்று வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா என்பன சிறப்பாக நடைபெற்றன.
இன்றைய உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.