களுவாஞ்சிகுடியில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் காரியாலயம் திறப்பு.



தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் பட்டிருப்பு தொகுதிக்கான மக்கள் சந்திப்பு காரியாலயம் களுவாஞ்சிகுடி நகரில் இன்று (07.07)   ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


மிக நீண்டகால தேவை, மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா. சாணக்கியன் முயற்சியின் பேரில் மக்கள் சந்திப்பிற்க்காக இந்த காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டது.



திறப்பு விழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.சிறிநேசன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை பிரதித்தவிசாளர் கனகரெட்ணம்  ரஞ்சினி , பிரதேச சபை உறுப்பினர்களான சி.காண்டீபன், ம.சுகிகரன்
வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன்,  இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா. சாணக்கியன், மாதர் முன்னணி உபசெயலாளர் திருமதி நற்குணம் தேவமணி, தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என  பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.