கல்முனை நகர் அதிர்ந்தது

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அதனை வரவேற்று இன்று மாலை கல்முனை மாநகரில் இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவந்த கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனும் பங்குகொண்டதுடன் அவரை இளைஞர்கள் தூக்கி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.