இராமாயன கால வரலாற்றினைக்கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முத்துச்சப்புர திருவிழா இன்று இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் எட்டாவது நாளாக இன்று இரவு சப்புரத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஏழுர் மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய உற்சவத்தில் வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா என்பன நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து விநாயகர்,சிவபார்வதி,வள்ளிதேவசேனா சமேத சிவசுப்ரமணியர் முத்துச்சப்புரத்தில் ஏறி வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் நாளை காலை 8.00மணியளவில் தேர் உற்சவம் நடைபெறவுள்ளதுடன் நாளை மறுதினம் ஆடி அமாவாசை தீர்த்தோற்சம் நடைபெறவுள்ளது.
இன்றைய உற்சத்தில் ஆயிரக்காண அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் எட்டாவது நாளாக இன்று இரவு சப்புரத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஏழுர் மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய உற்சவத்தில் வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா என்பன நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து விநாயகர்,சிவபார்வதி,வள்ளிதேவசேனா சமேத சிவசுப்ரமணியர் முத்துச்சப்புரத்தில் ஏறி வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் நாளை காலை 8.00மணியளவில் தேர் உற்சவம் நடைபெறவுள்ளதுடன் நாளை மறுதினம் ஆடி அமாவாசை தீர்த்தோற்சம் நடைபெறவுள்ளது.
இன்றைய உற்சத்தில் ஆயிரக்காண அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.