மூன்று மாதங்களை கடந்தும் மறந்துவிடமுடியாத காயம் -சோகத்துடன் நினைவுகூரப்பட்டது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.

இதனை முன்னிட்டு சீயோன் தேவாலயத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கான ஆதமசாந்தி பிரார்த்தனையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் விசேட பிரார்த்தனைகளும் நடைபெற்றுவருகின்றன.
சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த இருவர் உயிரிழந்த இருதயபுரத்தினை சேர்ந்த சரோன் மற்றும் சாரா ஆகியோரின் உறவினர்களின் இல்லத்தில் இந்த ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெற்றது.
மட்டக்களப்பு திமிலைதீவு கல்வாரி ஆராதனை சபையினால் இந்த ஆத்மசாந்தி பிரார்த்தனை நடாத்தப்பட்டது.
இந்த பிரார்த்தனை நிகழ்வு திமிலைதீவு கல்வாரி ஆராதனை சபையின் போதகர் ஜே.நகுலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆராதனை நிகழ்வில் கிராம சுவீச சபையின் போதகர் கே.தெய்வேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.