ஆறு வருட தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி மட்டக்களப்பு கல்குடா வலயத்தை சேர்ந்த களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் மாகாண மட்டத்தில் சம்பியன்.
2019 ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான எல்லே போட்டியானது இந்த மாதம் 11,12 ம் திகதிகளில் திருகோணமலையில் இடம்பெற்றன.
இந்த வருட மாகாண மட்ட போட்டியில் 34 அணிகள் பங்குபற்றிருந்தது.
இறுதி போட்டிக்கு மட்டக்களப்பு கல்குடா வலயத்தை சேர்ந்த களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் ஏறாவூர் மாக்கான் மாக்கான் அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் மட்/ககு/களுவன்கேணி விவேகானந்தா வித்யாலய அணி தமது துணிச்சலான ஆட்டத்தின் மூலம் 1ம் இடத்தை பெற்று, மாகாண மட்டத்தில் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் முதலாவது அணியாக வலம் வந்த ஏறாவூர் மாக்கான் மாக்கான் அணியை இரண்டாம் நிலைக்கு தள்ளியது.