மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன் வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலீசில் முறைப்பாடு ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

இன்று(12) பிற்பகல் 3,30 மணியளவில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் குறித்த முறைப்படினை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு " றுகையில்
இன்று நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்.
ஒன்று ஓட்டமாவடியில் இருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காளிகோயிலை உடைத்து காளிகோயில் காணியில் ஹிஸ்புல்லா அவர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பாவித்து மீன் சந்தை கட்டியமை , தனக்குச் சார்பாக தீர்ப்பு சொல்லாத நீதி பதியை இடம் மாற்றி தனக்கு சார்பான நீதிபதியை நியமித்து தீர்ப்பை மாற்றி எழுதியமை,இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு நடைபெற்ற மறுநாள் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் பாசிக்குடா விடுதியில் இருந்த மூன்று அரேபியர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாட் டை விட்டு வெளியேற்றியமை அதில் ஒருவர் விசா இன்றி தங்கி இருந்தமை உள்ளிட்ட குற்ற சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை ஹிஸ்புல்லா மீது யாரும் பகிரங்கமாக முறைப்பாடு பதிவு செய்யாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மாத்திரம் குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Show quoted text