ஒல்லிக்குளம் பகுதியில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் பெருமளவு வெடி பொருட்கள் இன்று மாலை மீட்க்கப்பட்டுள்ளன.

தேசிய தௌபீக் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் சகாவான சவூதியில் கைதுசெய்யப்பட்ட மில்ஹான் என்பவர் வழங்கி தகவலின் அடிப்படையில் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டன.

கொழும்பில் இருந்து மில்ஹான் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டு இந்த வெடிபொருட்கள் ஒல்லிக்குளத்தில் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 300 ஜெலிக்நைட் குச்சிகள்,1000 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட அதிரடிப்படையினரால் இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மாதம் ஒல்லிக்குளத்தில் சஹ்ரான் பயன்படுத்திய பிரதான முகாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று வெடிபொருட்களும் அப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேசிய தௌபீக் ஜமாத்தின் ஆயுதப்பிரிவுக்கான தலைவராக மில்ஹான் செயற்பட்டுள்ளதுடன் வவுணதீவு பொலிஸார் இருவரின் கொலையும் இவரின் தலைமையில் நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.