போரதீவுப்பற்றில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின ஆரம்ப நிகழ்வு

 (எஸ்.நவா)
ஜனாதிபதியின்; பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாக மே மாதம் 31 திகதி முதல் வரை பிரகடப்படுத்தப்பட்டு நாடலாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கைத்தொழில் வலுவூட்டல் அமைச்சின் அணுசரணையில்; சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு மாதமாக போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி 
தலைமையில்  போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில்; நடைபெற்றது.

இந்நிகழ்வில் போது சமுர்த்தி தலைமையகமுகாமையாளர் திரு.ஏ.தனேந்திரன் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு.என்.தியாகராசா சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு எஸ்.குபேந்திரராசா சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்பு தலைவர்கள் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.