சித்தாண்டியில் குடிநீர் வசதி அற்ற குடும்பங்களுக்கு குடிநீர் வசதி.



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோறளை பற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசு கட்சியின், வடகிழக்கு வாலிபர்  முன்னணியின் தலைவருமான கி. சேயோன் அவர்களின்    முயற்சியால் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு சித்தாண்டி பிரதேசத்தில் குடிநீர் வசதி அற்ற சில குடும்பங்களுக்கு  இன்று  குடிநீர் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் வதியும் சில குடும்பங்களுக்கு குடிநீரை பெற்றுக்கொள்வதற்க்கான குறைபாடுகள் நிலவியமையை கண்டறிந்து பிரதேச சபை உறுப்பினரான கி.சேயோனின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத்தொடர்ந்து, உரிய குடும்பங்களின் உண்மை நிலமை கண்டறிந்து குடிநீரை பெற்றுக்கொள்வதற்க்காக குழாய் கிணறுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.