தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் நடக்கவேண்டும் என்கிறார் துரைரெட்னம்

வடகிழக்கில் உள்ள தமிழ் பிரதிநிகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் செயற்படவேண்டுமே தவிர மத்திய அரசாங்கத்தின் அபிலாசைகளை பூர்த்திசெய்ய செயற்படுவார்களானல் அவர்கள் தமிழ் சமூகத்தினால் அந்நியப்படுத்தப்படுவார்கள் என ஈபிஆர்எல் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

இன்று பகல் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலத்தின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் றிசாத் பதியூதினுக்கு எதிராக விசாரணைகள் செய்யப்படவேண்டும்,விசாரணைகளின் ஊடாக அவர் குற்றவாளியென கருதும்பட்சத்தில் அவர் இராஜினாமா செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைக்கு இதுவரையில் தேர்தல் நடாத்தப்படாமல் இருப்பது மத்திய அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.மத்திய அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் எனவும் இரா.துரைரெட்னம் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் மத்தி அரசும், மாகாணசபையும் வேலைத்திட்டங்களைச் செய்யும் போது தமிழர்களும்,தமிழ் பிரதேசங்களும் கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்தன. கடந்த காலத்தைப் போல் 2019இல் இருந்து புறக்கணிக்கப்படக் கூடாது. இதை சீரமைக்க மாண்புமிகு ஜனாதிபதியும், கௌரவபிரதமர் அவர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும்;

குறிப்பாக அரசுக்குரிய நிதியை ஓதுக்கீடு செய்யும் போது வறுமை, விகிதாசாரம்,  சனத்தொகை, காணியின் பரப்பளவு பார்க்கப்படவேண்டும்.இவை பார்க்கப்படாததால் வாகரை ,கிரான்,செங்கலடியில் ஒரு பகுதி, வவணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி போன்ற பிரதேசம் இன்னும் வறுமையில் உள்ளன.

நியமனத்தின் போதும் திறமையும், இனவிகிதாசாரமும் பார்க்கப்படவேண்டும் கிழக்குமாகாணத்திலும்,மத்தியஅரசிலும்திறமையும்,சிரேஸ்டவிகிதாதசாரம் பார்க்கப்பட வேண்டும்

புதிய பிரதேசசெயலகம் உருவாக்குதல், 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகம் இன்றுகூட அதிகாரங்கள் இல்லாமல் இருப்பதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகளே காரணம்.

கல்வி வலயங்கள் உருவாக்குதல், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கான கல்வி வலயத்தை கடந்த காலத்தில் பிரித்து விட்டார்கள் இனிமேல் தமிழர்களாகிய நாங்கள் தமிழ்பாடசாலைகளை மட்டும் வைத்துக் கொண்டு புதிய வலயங்கள் உருவாக்க வேண்டும்.

உள்ள+ராட்சி சபைகள் உருவாக்குதல், 14பிரதேச செயலகத்திற்கும் 14உள்ளு+ராட்சி சபைகள் இருக்க வேண்டும் கிரான்,வாழைச்சேனை,வாகரை பகுதிகளிலுள்ள காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதற்காக 12உள்ள+ராட்சி சபைகளே இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. கிரானுக்குரிய உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.

புதியஅரச அலுவலகங்கள் திறத்தல், இது தொடர்பாக மாவட்டரீதியாகவும்,பிரதேச ரீதியாகவும் முஸ்லிம் பகுதிகளுக்குரிய அலுவலகங்கள் முஸ்லிம் பகுதிக்கும்,தமிழ்பகுதிகளுக்குரிய அலுவலகங்கள் தமிழ்பகுதிகளுக்கும் திறக்கப்பட வேண்டும்.

முப்படையினருக்கும், பொலிசாருக்கும் முகாம்கள் அமைத்தல், இம்முகாம்கள் அமைப்பது தொடர்பாக இனிமேல் முஸ்லிம் கிராமங்களில் முகாம் அமைக்காமல் தமிழ்பகுதிகளில் முகாம் அமைப்பதற்கு தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.

முப்படைகளுக்கும்,பொலிசாருக்கும் ஆட்களை திரட்டுவதில் தமிழர்கள் தங்களை இணைத்துக் கொள்வதோடு மத்தியஅரசு விகிதாசார ரீதியாக பொலிசாரை நியமிக்க வேண்டும்.

தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் தாம் கடமையாற்றுகின்ற பாடசாலையின் பொதுவான முடிவுகளை ஏற்று  தனது கலாசாரத்தையும் பாதுகாக்கவேண்டும்.பாடசாலையின் பொதுவான முடிவுகளுக்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது

தமிழ்பிரதேசங்களில் அரச நிருவாகங்களில் வேலை செய்கின்ற முஸ்லிம்களுக்கு கலாசார விடயங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் மதங்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா?
ழூகாணிவழங்குவது தொடர்பாக  பிரதேச மாவட்ட காணிபயன்பாட்டுக் குழுவில் முடிவெடுக்கப்பட்டு அமுல்படுத்த வேண்டும்.

அமைச்சுக்களின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச,மாவட்ட அபிவிருத்திக் குழுகூட்டங்களில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற மேற்குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் தமிழ்சமூகத்திற்கு மத்தியில் அலசப்படுகின்றன. இதன் காரணமாக அபிவிருத்தியில் கூட தமிழர்களும், தமிழ் பிரதேசங்களும் பாதிப்படக்கூடியவாறு செயற்பாடுகள் நடந்து வந்தன.

குறிப்பாக, முஸ்லிம் அமைச்சர்கள் அரசுடன் இணைந்து கொண்டு அரசின் நிதி ஓதுக்கீட்டு கொள்கைகளுக்கு அப்பால் சென்று தங்களது இனத்திற்காகவும் தேர்தலின் போது வாக்குகளைப் பெறுவதற்குமாகவே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டன. குறிப்பாக,கோறளைப்பற்றுவடக்கு (வாகரை), கோறளைப்பற்றுதெற்கு (கிரான்), ஏறாவூர்பற்று(செங்கலடியில்ஒருபகுதி),மண்முனைமேற்கு(வவுணதீவு),மண்முனைதென் மேற்கு(பட்டிப்பளை), போரதீவுப்பற்று (வெல்லாவெளி) போன்ற பிரதேசசெயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ் கிராமங்களை உற்று நோக்குவோமேயானால் நிதி ஓதுக்கீட்டைப் பொறுத்தவரையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருபது வருடங்களுக்கு மேல் இருந்து வருகின்றன. இப்பிரதேசத்தில் வறுமை தாண்டவ மாடுகின்றது.

இதேவேளை காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வருடாவருடம் நிதிஓதுக்கீடு செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றன. கேள்வி கேட்கும் பட்சத்தில் அமைச்சுக்கான நிதி அமைச்சு அனுமதியுடன் அபிவிருத்தி வேலைகள் செய்யப்படுகின்றன.  வருடந்தோறும் கிராம சேவையாளர் பகுதிகளுக்கு மேலும்மேலும் ஓதுக்கப்படும் நிதி ஓதுக்க வேண்டிய அவசியமே இல்லை. 

வறுமைப் பகுதிகள் இருக்க வறுமை அற்ற கிராம சேவையாளர் பிரிவிற்கு நிதி ஓதுக்கீடு செய்வது நிறுத்தப்பட வேண்டும்.புதிதாக மத்திய அரசினால் நியமிக்கப்படப் போகும் அமைச்சர்கள் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்படப்போகும் அமைச்சர்கள் ஓருபக்கச் சார்பாக கொள்கைக்கு முறணாக நிதி ஓதுக்கீடு அபிவிருத்தி, நியமனங்கள், வழங்கும் பட்சத்தில் அவர்களை தமிழர்களுக்குரிய அமைச்சர்களாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இனி தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதற்கான எதிர்ப்பை மிக விரைவில் தெரிவிக்க இருக்கின்றோம்.

ஒருஇனம்,கட்சிசார்பாக செயற்படுகின்ற ஆளுனர் அவர்களையும் பதவி நீக்கம் செய்து அரசியல்சாயமற்ற, நேர்மையான மூன்று இனங்களுக்கும் சேவைசெய்யக் கூடிய சிரேஸ்ட  அதிகாரி ஒருவரை ஆளுனராக நியமிக்கவேண்டும். தொடர்ச்சியாக கட்சி ரீதியாகவும், இனரீதியாகவும் ஆளுனர் அவர்கள் செயற்பட்டுக் கொண்டு வருவதனால் தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்வில்லை. குறிப்பாக, மூன்று மாத காலத்திற்கிடையில் கிழக்கு மாகாண ஆளுனர் அவர்கள் கிழக்கு மாகாண நிருவாகத்தை கட்சி ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என பல புகார்கள் உள்ளன என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்களும் ஐக்கியமாகவும்,ஓற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் மாண்புமிகு ஜனாதிபதியும், கௌரவபிரதமரும் இந்த விடயங்களில் இனியாவது தவறு விடாமல் மேற் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சீரமைத்து கிழக்கு மாகாணத்தில் பிரித்தாளும் தந்திரத்தை கைவிட்டு கிழக்கு மக்கள் ஓன்றாக வாழ்வதற்கு வழிசமைக்க வேண்டும். இவைகளை பாராமுகமாக இருந்தால் கிழக்குமாகாணத் தமிழர்கள் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் தங்களிடம் உள்ள வாக்குப்பலம் ஊடாக தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தங்களை தாங்களே நிருபித்துக் காட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.