குண்டுவெடிப்பில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூர்ந்த கடுக்காமுனை மக்கள்

கடந்த 21ஆம் திகதி இலங்கை முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய தொடர்ந்து குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்லவும் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திபெறவும் விசேட வழிபாடும் நினைவு நிகழ்வும் இன்று மாலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கடுக்காமுனையில் நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை,அருள்மிகு ஸ்ரீலக்ஸ்மி நாராயண ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஆலய முன்பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட கடந்த 21ஆம் திகதி இலங்கை முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய தொடர்ந்து குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்லவும் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திபெறவும் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வை.மோகன்,ஆலய நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.