(சசி துறையூர்)
உயிர்த்த ஞாயிறன்று இரத்தம் குடித்த கொடிய பயங்கரவாதிகளின் தாக்குதலின் ஒரு மாத நிறைவை நினைவு கூறி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலம் : 21.05.2019
நேரம் : மு.ப 8.00 - பி.ப 12.30
இடம் : தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனை.
ஏற்பாடு : மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம்.
21.04.2019 அன்று உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்காய் எங்கள் உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்த வாரீர்....❣