(எஸ்.நவா)
“செமட்ட செவண” யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் “செமட்ட செவண” கம்உதாவ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பழுகாமம் மாவேற்குடா பிரிவில் 23 வீடுகளும் மாலையர்கட்டு பிரிவில் 40 வீடுகளுக்களுக்கும் அடிக்கல் நடும் நிகழ்வு (11) வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் வேண்டுகோழுக்கமைவாக முன்னால் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் போரதீவுப்பற்று அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களினால் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. .
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் தனக்கென சொந்தமான வீட்டில் வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுக்கொடுக்கும் உன்னத உதாகம எண்ணக்கருவினை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தனிமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி;; பிரதேச செயலாளர் ஆர் ராகுலநாயகி உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவநேந்திரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் பொலிஸ் கிராம சேவை உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மதத்தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.