சீயோன் தேவாலய தாக்குதல் -மேலும் இருவர் பலி

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த இருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 28ஆக உயர்ந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நாவற்குடாவினை சேர்ந்த ரஞ்சித் சுரங்க (45வயது) நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோன் கல்லடி வேலூர் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான திருமதி கிருஜா பிரசாந் (35) பெண் இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சுரங்க என்பவரின் மனைவி குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகளும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வானின் மரண விசாரணைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.