சாய்ந்தமருதில் தொடரும் மோதல் -சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்கு சென்ற படையினருக்கும் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இருந்த ஆயுததாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடைபெறும் அதேவேளையில் சம்மாந்துறையில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று மாலை சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் பயன்படுத்தும் மேலங்கிகள் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேபோன்று சாய்ந்தமருறு சுனாமி வீட்டுத்திட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுவருவதாகவும் இதன்போது ஆயுததாரிகள் சிலர் பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.