மட்டு நகரில் தமிழ் இளைஞர் கைது!


 மட்டு நகரில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
நேற்று(21)  மாலை 07 மணியளவில் மட்டக்களப்பு வெள்ளப்பாலம் வீதியில் வைத்து படையினரால் மட்டக்களப்பு செங்கலடி - வந்தாறுமூலையைச் சேர்ந்த சாமித்தம்பி ரவீந்திரநாத் (வயது 29)என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் மட்டக்கப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அவர்களின் முற்போக்குத் தமிழர் அமைப்பின் முக்கிய பொறுப்பு வகிப்பவர் எனவும் அத்துடன் பல்வேறுபட்ட சமூக அமைக்களுடன் இணைந்து பொது வேலைகளிலும் ஈடுபடுவர் எனவும் கூறப்படுகிறது.
இவரது கைதுக்கான காரணம் எதுவும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை நாட்டில் தமிழ் மக்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும்  நேரத்தில் இவ்இளைஞரது கைதானது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.