கல்லடி பாலத்திற்கருகில் படகு எரிப்பு –பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகொன்று இனந்தெரியாதவர்களினால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஆழ்கடல் மீன்பிடிக்காக கல்லடி பாலத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகே எரியூட்டப்பட்டுள்ளதாகவும் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.