கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெறும் நான்காவது உலக சுற்றாடல் தினத்தில் கலந்துகொள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கென்யா நோக்கிச் சென்றுள்ளதாக அவரது ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் எட்டு பேர் உள்ளடங்கிய குழுவினர் கென்யா நோக்கி பயணமாகியுள்ளதாகவும், கடந்த 13ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை இவ் மகாநாடு நடைபெரவுள்ளதாகவும், சுமார் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கிப்பட்டுட்டது.
மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கைச் சுற்றுச்சூழல் பற்றி விசேட உரை நிகழ்த்தியுள்ளதுடன், "நீர் பாதுகாப்பு" பற்றிய விசேட உரையினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆற்றவுள்ளதாகவும், மேலும் பல அறிக்கைகளை அங்கு சென்றுள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் முன்வைத்து உரையாற்றவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.