மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்த பிரபல நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக் இன்று மட்டக்களப்பு நகரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய நடிகர் காந்தி பூங்காவில் பசுமை புரட்சிக்கு அமைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
அதனைத்தொடர்ந்து நீருற்று பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்திரின் திருவுருவச்சிலைக்கும் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று மாநகரசபையினை பார்வையிட்டதுடன் அங்கு மாநகரசபை முதல்வரினால் நடிகர் விவேக் நினைவுச்சின்னம் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து மாநகரசபையில் ஊழியர்களை சந்தித்த நடிகர் விவேக் அங்கு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் க.சித்திரவேல்,மாநகரசபை உறுப்பினர்கள்,ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய நடிகர் காந்தி பூங்காவில் பசுமை புரட்சிக்கு அமைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
அதனைத்தொடர்ந்து நீருற்று பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்திரின் திருவுருவச்சிலைக்கும் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று மாநகரசபையினை பார்வையிட்டதுடன் அங்கு மாநகரசபை முதல்வரினால் நடிகர் விவேக் நினைவுச்சின்னம் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து மாநகரசபையில் ஊழியர்களை சந்தித்த நடிகர் விவேக் அங்கு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் க.சித்திரவேல்,மாநகரசபை உறுப்பினர்கள்,ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.