(சசி துறையூர் )
படுவானில் கவிபாடி சத்தமில்லாது சாதிக்கும் கவிக்குயில் இவன்.
படுவானில் கவிபாடி சத்தமில்லாது சாதிக்கும் கவிக்குயில் இவன்.
சமூக வலைத்தளங்களில் சமகால அரசியல் மற்றும் பொது விவகாரங்களை, கடந்தகால வாலிப சுவடுகளை இரண்டு அல்லது மூன்று நிமிட காணொளியில் கனதியான கவிதைகளாக வசனங்களை வார்த்து , அழகாக முத்தாய் கோர்த்து , மெய்சிலிர்க்கும் வகையில் படைத்திடும் அருண்மயூ என அதிகம் அறியப்படும் மயூரனை சவுதி அரேபியா மண்ணிலிருந்து மின்னஞ்சல் ஊடாக நேர்காணல் செய்தது எமது வாசகர்களுக்காக.
ஒரிரு படைப்புக்களை தந்துவிட்டு அதிதமாக பட்டங்களையும் கெளரவங்களையும் பெற்றுவிட்டு, தம்பட்டம் பேசும், இன்னும் அதிகம் எதிர்பார்ப்புக்களோடு உள்ளவர்களுக்கு மத்தியில் வித்தியாசமான தனித்துவமான இளம் கலைஞன் இவன்.
நிலாச்சோறு முகநூல் குழுமம், தமிழ் நாடு கவியுலக பூஞ்சோலை, அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்சு , என பல அமைப்புக்களில் பல வெற்றி சான்றிதழ் பெற்று பத்திரமாய் பதுக்கிவிட்டு கடுகளவும் வித்துவ செருக்கில்லாது , சிலாகித்து பேசும் வயதில் இளையவன் ஆனால் படைப்புக்களில் முதிர்ந்தவன்.
வணக்கம் மயூரன் மட்டு செய்திகள் இணையத்தளம் சார்பாகவும், எனது சார்பாகவும் முதலில் உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
படுவானின் யுத்தம் தின்ற பகுதியிலிருந்து ஈழத்தில் மட்டுமல்ல கடல்தாண்டியும் அறியப்பட்ட ஒரு மனிதராக இன்றைய இளைஞர்களின் முகப்புத்தகங்களை ஆக்கிரமித்துவிட்டீர்கள்.
உங்களை எமது மக்களுக்காக வெளிச்சமிடுவதில் மிக்க மகிழ்ச்சி .
வாருங்கள் தொடர்ந்து மயூரனுடன் பேசலாம்.
( நேர்காணல் தொடரும் )