சுஹதாக்கள் பூங்கா நுழைவாயில் மற்றும் பூங்கா புனரமைப்பு வேலைகள் கையளிக்கும் நிகழ்வு

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் துரித கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் நூருஸ்ஸலாம் பள்ளிவாசலில் அமைக்கப்பட்ட சுஹதாக்கள் பூங்கா நுழைவாயில் மற்றும் பூங்கா புனரமைப்பு வேலைகளையும், இராஜாங்க அமைச்சரின் வரவு செலவுத்திட்ட நிதியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் அபிவிருத்தி வேலைகளையும் கையளிக்கும் நிகழ்வு நூருஸ்ஸலாம் பள்ளிவாசல் தலைவர் எம்.எல்.ஏ.லத்தீப் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா கலந்து கொண்டதுடன் ,ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான நளீம் ஹாஜி ,ரியால் ஹாஜி , காத்தான்குடி நகர சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன் உட்பட அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள் , உலமாக்கள் , பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
.
இதன் போது இம்முறை நிதி ஒதுக்கீட்டிலும் மஸ்ஜிதுல் நூருஸ்ஸலாம் பள்ளிவாசலுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதாக இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் உறுதியளிக்கப்பட்டது.