கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்கதும் மிகவும் பிரசித்திபெற்றதுமான மட்டக்களப்பு கல்லடி,வேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பிரசித்திபெற்றதும் அதற்புதம் நிறைந்த ஆலயமாக கல்லடி,வேலூர் பத்திரகாளியம்மன் ஆலயம் விளங்கிவருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் சனிக்கிழமை ஊர்காவல் திருஉலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஏழு தினங்கள் நடைபெறும் இந்த திருச்சடங்கில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நெல் குற்றும் திருச்சங்கு நடைபெற்றது.
நேற்று மாலை புதன்கிழமை மாலை ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்று மாலை கடற்கரையில் மஞ்சள் குளிக்கும் திருச்சடங்கு நடைபெற்று தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பிரசித்திபெற்றதும் அதற்புதம் நிறைந்த ஆலயமாக கல்லடி,வேலூர் பத்திரகாளியம்மன் ஆலயம் விளங்கிவருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் சனிக்கிழமை ஊர்காவல் திருஉலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஏழு தினங்கள் நடைபெறும் இந்த திருச்சடங்கில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நெல் குற்றும் திருச்சங்கு நடைபெற்றது.
நேற்று மாலை புதன்கிழமை மாலை ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்று மாலை கடற்கரையில் மஞ்சள் குளிக்கும் திருச்சடங்கு நடைபெற்று தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.