மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கம்பிரலிய திட்டத்தின் ஊடாக அபிவிருத்திக்காக ஐந்துகோடி ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதற்கு போரதீவுப்பற்று பிரதேசசபையின் அமர்வின் போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் முயற்சியின் பயனாக இந்த நிதியொதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் 12வது அமர்வு நேற்று போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வின்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
கடந்த முப்பது வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதியென்ற அடிப்படையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளமை குறித்து இங்கு உறுப்பினர்களினால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
வீதி பிரச்சினை,குடிநீர் பிரச்சினை,போக்குவரத்து பிரச்சினை,யானைகளின் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.
இதன்போது உரிமையோடு இணைந்த அபிவிருத்தியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுத்தரும் எனவும் போரதீவுப்பற்றுக்கு ஐந்து கோடிரூபா கம்பிரலிய திட்டத்தின் ஊடாக அபிவிருத்திக்காக வழங்கியதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு நன்றி தெரிவிப்பதாக இங்கு கருத்து தெரிவித்த போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த போரதீவுப்பற்று பிரதேசபை உறுப்பினர் விக்னேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு நன்றி தெரிவிப்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனை மட்டும் நாங்கள் பாராளுமன்றம் அனுப்பவில்லை.யோகேஸ்வரன் ஐயாவினையும் அனுப்பியுள்ளோம்.அவர் எங்கே சென்றார் என்றும் தெரியவில்லை.அவரது நிதியொதுக்கீடுகள் எதுவும் வராதது கவலையளிக்கின்றது.அவரது நிதியொதுக்கீடுகளும் எமது பிரதேசத்திற்கு வந்தடையவேண்டும் என்றார்.
அத்துடன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் முயற்;சியினால் 36 கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் யானையின் அட்டகாசம் காரணமாக பல அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டுவருவதுடன் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருவதாக பிரதேசசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக அம்பாறை பகுதியில் இருந்துவரும் யானைகளே அதிகளவான சேதங்களை விளைப்பதாகவும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு முறையிடும்போது அவர்கள் உடடினயாக வருவதில்லையெனவும் இதன்போது உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு யானை பிரச்சினைக்கு தீர்வுக்காக நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டபோதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் செய்யப்படவில்லையென்ற குற்றச்சாட்டும் உறுப்பினர்களினால் இங்கு முன்வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் யானைகளின் அட்டகாசத்தினை முடிவுக்கு கொண்டுவர வஜீவராஜிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கான பிரேரணையொன்று உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் தவிசாளரினால் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் முயற்சியின் பயனாக இந்த நிதியொதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் 12வது அமர்வு நேற்று போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வின்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
கடந்த முப்பது வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதியென்ற அடிப்படையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளமை குறித்து இங்கு உறுப்பினர்களினால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
வீதி பிரச்சினை,குடிநீர் பிரச்சினை,போக்குவரத்து பிரச்சினை,யானைகளின் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.
இதன்போது உரிமையோடு இணைந்த அபிவிருத்தியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுத்தரும் எனவும் போரதீவுப்பற்றுக்கு ஐந்து கோடிரூபா கம்பிரலிய திட்டத்தின் ஊடாக அபிவிருத்திக்காக வழங்கியதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு நன்றி தெரிவிப்பதாக இங்கு கருத்து தெரிவித்த போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த போரதீவுப்பற்று பிரதேசபை உறுப்பினர் விக்னேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு நன்றி தெரிவிப்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனை மட்டும் நாங்கள் பாராளுமன்றம் அனுப்பவில்லை.யோகேஸ்வரன் ஐயாவினையும் அனுப்பியுள்ளோம்.அவர் எங்கே சென்றார் என்றும் தெரியவில்லை.அவரது நிதியொதுக்கீடுகள் எதுவும் வராதது கவலையளிக்கின்றது.அவரது நிதியொதுக்கீடுகளும் எமது பிரதேசத்திற்கு வந்தடையவேண்டும் என்றார்.
அத்துடன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் முயற்;சியினால் 36 கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் யானையின் அட்டகாசம் காரணமாக பல அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டுவருவதுடன் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருவதாக பிரதேசசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக அம்பாறை பகுதியில் இருந்துவரும் யானைகளே அதிகளவான சேதங்களை விளைப்பதாகவும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு முறையிடும்போது அவர்கள் உடடினயாக வருவதில்லையெனவும் இதன்போது உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு யானை பிரச்சினைக்கு தீர்வுக்காக நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டபோதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் செய்யப்படவில்லையென்ற குற்றச்சாட்டும் உறுப்பினர்களினால் இங்கு முன்வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் யானைகளின் அட்டகாசத்தினை முடிவுக்கு கொண்டுவர வஜீவராஜிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கான பிரேரணையொன்று உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் தவிசாளரினால் நிறைவேற்றப்பட்டது.